பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!
உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!
என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!
உன் அறை
உன் பிம்பம்
என் கோவில்
என் சாமி!
மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!.......
காதல் கண்ணீர்....
6:06 PM |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment