காதல் கண்ணீர்....

பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!

உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!

என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!

உன் அறை
உன் பிம்பம்
என் கோவில்
என் சாமி!

மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment