அம்மா......

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காத்திருத்தல்.....

காத்திருப்பது சுகம் என்று
மீராவுக்கு தெரிந்திருக்கிறதாம்..
காக்க வைப்பது பாவம் என்று
கண்ணனுக்கு ஏன் தெரியவில்லை?......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யார் நீ? .......

எங்கிருக்கிறாய்… என்னவளே….
யார் நீ?
எப்படி இருப்பாய்?
ஒல்லிக்குச்சியா?
பூசணிக்காயா?
பனைமரமா?
குள்ளக் கத்தரிக்காயா?

ஆனால்
நிச்சயமாய் கேள்விக்குறிகளின்
நிரந்தரப் பதிலாய்…
பெண்ணாய்,
பெண்ணியத்தோடு…

தோள்களில் சாய்ந்தும்,
தலைமுடியைக் கோதியும்,
மூக்கோடு மூக்கை உரசியும்,
என் உயிரைப் பிழியப்போகின்றாய்…

தனிமையை…
அழுகையை…
அன்பை…
ஆண்மையை….
முழுமையாய் ஆக்கிரமிக்கப் போகின்றாய்..

நம் சிசுவை வயிற்றிலும்,
உன் நினைவுகளை என் இதயத்திலும்
பாரமின்றி நிரப்பப்போகின்றாய்…

நினைக்க… நினைக்க
இனித்தாலும்…

தொட்டிக்குள் நீந்தும்
மீனைப் போல

உன்னையே சுற்றும் என்
கற்பனைத் தாளில்

ஏனோ நீ மட்டும்
விவரிக்கப்படாத விபரமாய்…

நானோ கிறுக்கப்படாத
வெற்றுக் காகிதமாய்…

முகம் தெரியாத உனக்காக,
முகவரி இடப்படாத
வாழ்த்து அட்டைகள்,
பரிசுப் பொருட்கள்…
கூடவே நானும்.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதலை எப்படி சொல்ல......

என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆனாலும் புடிச்சிருக்கு.....

"எழுதி எழுதி
என்னத்த கண்ட?"
மனசாட்சி என்னைக் கேட்டாலும்
எண்ணத்தில் உள்ளதை எல்லாம்
எழுதிக் குவிக்கின்றேன்.
உள்ளுக்குள் போராட்டம்
ஓராயிரம்.
ஆனாலும் புடிச்சிருக்கு
அவளைப் பற்றி எழுதுவதற்கு.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

க(னவு) விதை....

காதலித்தால் கவிதை வருமாம்
உண்மையோ நானறியேன்
ஒன்று மட்டும் சொல்வேன் நான்
க(னவு) விதை என்று

காதலனும் காதலில் தோற்றவனும்
புதிய, பழைய கனவுகளை மீட்க
பண்படுத்திய இதய மண்ணிலே
விதைக்கின்ற விதைகள்தான் இது

சில வேளை அழகு என்ற கறையானும்
வசதி என்ற எறும்புகளும்
குடும்பம் என்ற நத்தையும்
க(னவு)விதைகளை நாசம் செய்யும்

அப்போதே விடடுக்கொடுக்க தயாராக
உங்கள் கைகளிலே ஏந்துங்கள்
நீங்கள் கனவுலகில் பெற்றெடுத்த உங்கள்
அன்புக் குழந்தையை மட்டும்

அது மட்டுமே உங்களுக்கு சொந்தம்
மற்றதெல்லாம் மாறிவிடும்
சந்தர்ப்ப சூழ்நிலை என்ற
வெள்ளப் பெருக்கினால்.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் கண்ணீர்....

பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!

உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!

என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!

உன் அறை
உன் பிம்பம்
என் கோவில்
என் சாமி!

மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் கவிதை....

நிஜம் என்று சொல்வதா
நிழல் என்று கூறுவதா


பதினான்கில் பறந்து கண்டேன்
பதினாறில் ஒன்றாய் கண்டேன்


நான் சொல்ல கேட்கவில்லை
நு நினைக்க பார்க்கவில்லை


காலம் கடந்து சென்றாலும்
கனவின் முகம் மாறவில்லை

நீ நிலவென்று குறவில்லை
நித்திரையில் காண தடையுமில்லை


நாளை வரை காத்திருப்பேன்
நான்கில் சொல்லத்தான் கொண்டுவ்ந்தேன்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு பசுவின் மனு.....

என்னைப் பார்த்துத்தானே
கூறினீர்கள் ...
தாயை அம்மா என்று !

பெற்ற தாயே தன்
சிசுவுக்குப் பால்தர மறுக்கும்
இக்காலத்தில்-நான்
மறக்கவில்லையே உங்களின்
சிசுவுக்குப் பால் தர !

காய்ந்த தீவனம்,
வடிகட்டிய நீர்,
மிஞ்சிய சாதம்,
இப்படி உன்னில் எஞ்சியதையே
எனக்கு நீ அளித்தாலும்
உனக்கு நான் அளிப்பது
சுத்தமான கலப்படமில்லா பால் தானே !

என்னில் ஊசி மருந்து செலுத்தி
என் ரத்தத்தை உறிஞ்ச
எவர் கொடுத்தார் உனக்கு அதிகாரம்?
ஏனிந்த பேராசை !

என்னில் செலுத்தும்
ஒவ்வொரு ஊசியும் உன்னைப்
பெற்றவளின் மார்புக் காம்பில்
செலுத்துவதற்குச் சமம்.

நானாகக் கொடுத்தால்
பால்.
நீ ஊசியால் கறந்தால்-அது
என் ரத்தம்.

வேண்டாம் மகனே!
நானே விரும்பிக் கொடுக்கிறேன்
வாழும் வரை !

என்னை வீழ்த்தித் தான்
குடிப்பேன் என்றால் அது
பாலல்ல....விஷம் ...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உன் கவிதையை நீ எழுது.....

உன் கவிதையை நீ எழுது
எழுது
உன் காதல்கள் பற்றி
கோபங்கள் பற்றி
எழுது

உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள
விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப்
புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி
நிற்கும் அழகு பற்றி எழுது

நீ போடும் இரட்டை
வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட
விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட
முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது

எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை
என்றால்...

ஒன்று செய்

உன் கவிதையை நான் ஏன்
எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தாரை வார்க்கப்பட்ட தமிழினம்.........

குப்பை மேடுகளாய் குவிகிறது தெருவோரம்
ஆதரவு இல்லாமல் பல்லாயிரம் தமிழ் பிணங்கள்

ஈழத்தில் நடக்கும் தமிழன படுகொலைகள்
உலகமெல்லாம் தெரிகிறது
இங்கிருக்கும் தமிழகத்தில்
என்னவென்றே தெரியவில்லை

தமிழகம் கைவிட்டதால்
தமிழினமே அழிந்தது
தமிழன் என்ற உணர்விழந்து
பிழை ஒன்று செய்தது

உலகெங்கும் தமிழ் சொந்தம்
நம்மை கேள்வி கேட்ட்குது
உணர்வுள்ள நெஞ்சமெல்லாம்
தலை குனிந்து நிற்குது

பாதுகாப்பு வளையதுக்குள்ளே
கொத்து குண்டு வீசிகிறான்
பாதுகாப்பு சபைகள் எல்லாம்
பார்த்துக்கொண்டு இருக்குது

அடக்கம் செய்ய சொந்தம் இன்றி
அனாதைகளாய் மடிகின்றான்
கேள்விகேட்க நாதிஇன்றி
சொந்த நாட்டில் சாகிறான்

சிங்களனின் சூழ்ச்சிஇனில்
உலக நாடு வீழ்ந்தது
வீரமிக்க தமிழினமே
உலக வரைபடத்தில் அழிந்தது

தமிழகத்து தமிஜினமாய்
நடமாடும் பிணங்களாய்
நாமிருந்து என்ன பயன்
சொரணை கேட்ட ஜென்மமாய்

ஆட்சிகட்டிலில் அமர்ந்து கொண்டே
லட்சம் கொலைகள் செய்கிறான்
லட்சியத்திற்காக வாழ்ந்த இனத்தை
தடை விதித்தே அழிக்கிறான்

வாழ்ந்த இனம்
வீழ்ந்த கதை
நம் சந்ததிகள் படிக்குமே

தமிழினத்தை தாரை வார்த்த
தமிழகத்தை ஏசுமே
செத்ததெல்லாம்
பிணங்களல்ல
சொரணை உள்ள தமிழினம்

நேசம் காட்ட உறவிருந்தும்
தாய் மண்ணுக்காக வீழ்ந்திட்டான்
தேசம் காண நினைத்த இனம்
வேரறுந்து நிற்குது

இனமொன்று வாழ்ந்தது
தன்னுரிமைக்காக எழுந்தது
உலக நாடு தடை விதித்ததால்
வழியின்றி வீழ்ந்தது

நம்பியிருந்த சொந்தமெல்லாம்
நடுத்தெருவில் விட்டது
உலகம் செய்த துரோகத்தினை
நினைத்து நெஞ்சம் சுட்டது

மிச்ச மீதி உள்ள தமிழன்
அடிமை விலங்கை உடைத்திடுவான்
சிங்களனக்கு அடிபணிந்து
தமிழ் புலிகள் வாழாது..........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சுகப் பிரசவம்!......

“வலி வரலைன்னா
சொல்லும்மா சிசேரியன்
பண்ணிடலாம்”
-கேட்ட மருத்துவரிடம்,
வேண்டாமென மறுத்துவிட்டேன்!

பெத்தவருக்கு தான்
பெருஞ்செலவு ஆகுமென்று!

வலியை வரவழைக்க
வலிய முயன்றேன்!

எனிமா ஏற்று
குடலை சுத்தமாக்கி,

புடவை அவிழ்த்து
இரவுடை தரித்து,

முக்கத் தொடங்கினேன்
கட்டிலில் படுத்து!

பற்றிக்கொள்ளத் துணையைத் தேடி
கட்டில் கம்பியைப் பற்றிக்கொண்டு,
விழிகளைப் பிதுக்கி,
பல்லைக் கடித்து,
அடிவயிறு உப்பி,
கால்களை உதறி,
முக்கி முக்கி,
உந்தி உந்தி
தள்ளுகிறேன் ஓர் உயிரை,
உலகைக் காண!

முகமெல்லாம் வியர்த்து,
உடல் தளர்ந்து,
உள்ளமும் சோர்ந்து,

உள்ளே, செத்துப்
பிழைத்தேன், நான்!

வெளியே, சொன்னார்கள்:
“சுக“ப் பிரசவம் என்று!.........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS