காதல் தோற்றதாய் கதைகள் ஏது?........



உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வளியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம் .

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு
ஒருபுறம் தலைவன் மறுபுறம் தகப்பன் இருகொல்லி எருபானால்
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானால்
யார் காரணம் ..? யார் பாவம் யாரை சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தால் கண்ணீராலே
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை

மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எறிந்தாலே
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வாசம் விழுந்தானே
நதி வழி போனால் கருவற கூடும் விதி வழி போனானே
விதை ஓன்று போட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே
என் சொல்வது என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வளியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment