காதல் வாழும்....



காதல் விளக்கு மாதிரித்தான்
ஏற்றுவதற்கு
தீப்பந்தம் எடுத்து வந்தது
என் தவறு தான் - அதற்காக
தீபத்தை அணைக்க
தீயணைப்பு படையா - வேண்டமடி

தீ அழாகாகும் இடம் தீபம்தான்
வாழ்க்கை அழாகாகும் இடம் காதல்தான்

தீபம் ஏற்றுவது பக்தனின் விருப்பம்
ஏற்பதும் ஏற்காததும் கடவுளின் விருப்பம்
இல்லாளக நீ என்பது என் விருப்பம்
இருப்பாயா இல்லையா என்பது உன் விருப்பம்

கடவுள் ஏற்கவில்லை என்றாலும்
நெய் இருக்கும் வரையில் தீபம் வாழும்
நீ இல்லை என்றாலும் - என்
மெய் இருக்கும் வரையிலும் காதல் வாழும்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment