எப்போது காதல் வந்தது.....
1:43 PM |
எண்ணிப் பார்க்கிறேன் நான், எப்போதடி
உன் மேல் எனக்குக் காதல் வந்ததென்று
என்னை மிகவும் பிடிக்கும் என்றாயே
அப்போதுன்மேல் காதல் வந்ததா...
என் மேல் இவ்வளவு அக்கறை காட்டுகிறாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா...
வசீகரமான உன் முகத்தைப் பார்த்த நாளன்று
உன் மேல் கண்டதும் காதல் வந்ததா...
எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும் பிடித்திருக்கிறதே
அப்போதுன் மேல் காதல் வந்ததா...
என் தாயை 'அம்மா' என்றழைத்தாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா...
என் நலனுக்காக நீ வேண்டிக்கொண்டாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா...
என் வேலையில் நீ எனக்கு உதவினாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா...
இல்லையடி இல்லை.
என் விருப்பத்திக்கேற்ப நீ நடந்த போதெல்லாம்
உன் மேல் காதல் வரவில்லை
உன் விருப்பத்திக்கேற்ப நானும் இருக்க
வேண்டும் என்றெண்ணிய போது உணர்ந்தேனடி
உன் மேல் எனக்கு காதல் வந்ததென்று..........
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Very Nice da..........
cool
un virupathirku kerpa naanum erukk vendum endru enniyapothu unardhenadi unmel enaku kadhal vanthathendru . unmayana kadhal oruvari oruvar purinthukollum pothu perivu enpathu varuvathillai.
Post a Comment